Here are few snaps from Surya-Jothika wedding reception. Good to see the reception was held in Jo’s traditional way! 🙂
September 14, 2006
Surya Jothika Marriage Reception Snaps
September 12, 2006
Dear Surya…
Totally disappointed with the way “Newyork Nagaram” song is picturized !!!
எவ்வளவு அழகா எடுத்து இருக்க வேண்டிய பாட்டு? அதான் எதையும் ரொம்ப ஓவரா எதிர்பார்க்க கூடாதுங்கிறது 😦
தேவை இல்லாத கிராஃபிக்ஸ், கன்னா பின்னான்னு அதிகமான ஷாட், படு கேவலமான எடிட்டிங் எல்லாம் ஒரு சேர ஒரு ஷாட் கூட மனசுல உட்காரல. எங்க அதுக்கெல்லாம் நேரம் இருந்தாதானே? அதான் எல்லா சீனும் கண் இமைக்குறதுக்குள்ள இங்க இருந்து அங்கன்னு ஓடிட்டு இருக்கே.
அருமையான இந்த பாடல் வரிகளுக்கு, சோகமா முகத்துல உணர்ச்சிகளை மட்டும் காட்டி இருக்கனும். “Dil Chahta hai” படத்துல “Tanhayee” பாட்டுக்கு அமீர்கான் வருவது போல!
என்னத்த சொல்றது, நீங்களே ஒரு எட்டு போய் பாருங்க இந்த கொடுமைய?முன்பே வா பாட்டு பரவா இல்ல. அந்த அளவுக்கு ஒன்னும் சொதப்பல. இருந்தாலும் இங்கேயும் இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம், “சினேகிதனே” பாட்டு மாதிரி. ஆனா நியூயார்க் நகரம் பாட்டுக்கு இது எவ்வளவோ பரவா இல்லை.
யாரோ சொன்ன மாதிரி, சூர்யாவோட பெண் ரசிகைகளை மட்டும் மனசுல வெச்சு எடுத்துட்டாங்க போல இந்த படத்தை. சூர்யா! நீங்க ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்குங்க, இப்படி இந்த மாதிரி நெஞ்ச நிமித்திகிட்டு நடக்குறவங்களை விட மாடர்ன் ஐயனார் மாதிரி உள்ள விஷாலைதான் எல்லா பொண்ணுங்களும் ரசிக்கிறாங்களாம்! இங்க போயி பாருங்க, ஒரு பொண்ணு எப்படி விஷால் பின்னாடி சுத்துதுன்னு.
எது எப்படியோ 9/11 அன்னிக்கு ஜோ-வை மணம் முடிச்சுட்டீங்க, அந்த விளம்பரத்துலயாவது இந்த படம் ஓடட்டும்.
நன்றி: விகடன்அய்யோ சொல்ல வந்தத சொல்லவே மறந்துட்டேன். Wish you a very happy married life! 🙂
September 7, 2006
Steve Irwin
இறைவன் இந்த பிரபஞ்சத்தைப் படைத்ததே, தன்னை உணர்த்துவதற்காகத்தான் என்று அப்துல் ரகுமான் எழுதிய ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். அப்படி இறைவனால் படைக்கப் பட்ட இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் இயற்கையோடு ஒன்றிப் போவது ஒன்றும் ஆச்சர்யமான விஷயமல்ல, இருந்தும் எவ்வளவு பேருக்கு இங்கு இயற்கையின் இயல்பு ஒத்துப் போகிறது. நம்மில் பலர் எப்பவும் இயற்கைக்கு எதிராக முரன்பட்டு இயற்கையை வெல்ல முயன்று இறுதியில் தோற்றுப் போகிறோம். அப்படி தோற்றுப் போய் இறுதியில் இறக்க நேரிடுவதைத்தான் “இயற்கை எய்தினார்” எனக் கூறுகிறோம் போல. இயல்பான மரணத்தை, இயற்கை எய்தினார் எனக் கூறினாலும் அதற்கு மேலே சொன்னது போல அர்த்தம் கொள்வதும் சரியே.
அப்படி இல்லாமல் இயற்கையோடு ஒன்றிப் போய் இன்று தன் வாழ்வையும் இயற்கை வசம் ஒப்படைத்திருக்கும் இவரின் இழப்பு மிகவும் வருந்ததக்கது. ஸ்டீவ் மரணம் இயல்பான ஒன்றாக இல்லாமல் போனாலும் இயற்கை எய்தினார் எனக் கூறுவதே சரி.
September 5, 2006
September 4, 2006
September 1, 2006
August 25, 2006
Newyork Nagaram …
Couldn’t resist myself adding/linking this beatiful image in my own space.
Thanks to Arvind.